News July 8, 2025
பதவி விலக முதல்வர் உத்தரவு.. உடனே செய்த 4 தலைவர்கள்!

மதுரை மாநகராட்சியில் மண்டல தலைவர்கள் தனியார் கட்டடங்கள், வீடுகளுக்கு சொத்து வரியை குறைத்து காட்டி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு சென்ற நிலையில், உடனடியாக மாநகராட்சியின் மண்டலத் தலைவர்களை ராஜினாமா செய்ய நேற்று உத்தரவிட்டார். இந்நிலையில், மண்டலத் தலைவர்கள் பாண்டிசெல்வி, சரவண புவனேஸ்வரி, சுவிதா, முருகேஷ் சர்மா ஆகியோர் தற்போது ராஜினாமா செய்துள்ளனர்.
Similar News
News July 8, 2025
தவெகவின் புதிய செயலி.. என்ன ஸ்பெஷல்?

தவெக கட்சி சார்பில் MY TVK என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே இக்கட்சி செல்போன் செயலியை கொண்டு சேர்க்கையை நடத்தி வருகிறது. புதிய செயலியை விஜய் விரைவில் அறிமுகம் செய்து வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் தொண்டர்களுக்கு அவரே எடுத்து சொல்வாராம். சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையடுத்து விஜய் தனது அரசியல் நகர்வுகளை வேகப்படுத்தி வருகிறார்.
News July 8, 2025
கலர் கலராக இருக்கும் வாட்டர் பாட்டில் மூடி சொல்லும் சங்கதி?

ஒவ்வொரு பாட்டில் மூடியின் கலரும் அந்த தண்ணீரை பற்றிய தகவலை சொல்கிறது ◆நீலம்: ஊற்றிலிருந்து எடுக்கப்பட்ட நீர், மினரல் வாட்டராகும் ◆வெள்ளை: இயந்திரம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் ◆பச்சை: ஃப்ளேவர் சேர்க்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட நீர் ◆கருப்பு: அல்கலின் சேர்க்கப்பட்ட தண்ணீர் ◆மஞ்சள்: வைட்டமின்கள் & எலக்ட்ரோலைட்ஸ் சேர்க்கப்பட்ட தண்ணீர். SHARE IT.
News July 8, 2025
பாரத் பந்த்… பள்ளி, கல்லூரிகள் நாளை இயங்குமா?

மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் நாளை (ஜூலை 9) நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. அதில், தமிழகத்திலும் ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதனால், அத்தியாவசிய பணிகள் பாதிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், பள்ளிகள் வழக்கம்போல் இயங்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இரவுக்குள் வெளியாகுமா?