News July 8, 2025
தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம்!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகின்ற 08.07.2025 அன்று காலை 11.00 மணியளவில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம்
நடைபெறவுள்ளது. குறைதீர்ப்பு கூட்டத்தில் அனைத்து வகையான தூய்மைப்பணியாளர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தெரிவித்துள்ளார்.
Similar News
News July 8, 2025
கொத்தப்பள்ளி கதிர்நரசிங்கர் கோயில்!

திண்டுக்கல் ரெட்டியார்சத்திரத்தில் புகழ்பெற்ற கதிர்நரசிங்கர் கோயில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் நரசிம்மரை, பிரதோஷ நாளான இன்று, பால், இளநீர், பன்னீர், மஞ்சள், திருமஞ்சனப்பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபட்டால், தீராத கடன் தொல்லைகள் தீருமாம். கடன் தொல்லையில் சிக்கியுள்ள உங்கள் நண்பர்களுக்கு இத SHARE பண்ணுங்க.
News July 8, 2025
திண்டுக்கல்: விளையாட்டு வீரர்களுக்கு முக்கியமான எண்

திண்டுக்கல்: விளையாட்டுதுறையில் சர்வதேச தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளை பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள் மாத ஓய்வூதியம் பெற விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் – 624004 என்ற முகவரியிலும், 7401703504 என்ற கைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
News July 8, 2025
வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.12,000!

தமிழ்நாட்டின் வேலையில்லா இளைஞர்களுக்கு திறன் பயிற்சி, ஊக்கத் தொகையுடன் ‘வெற்றி நிச்சயம்’ எனும் செயலி மூலம் வழங்கப்படுகிறது. இதில், படிப்பை பாதியில் நிறுத்தியவர்களும் பயன்பெறலாம். தொலைதூரத்தில் இருந்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம் என அனைத்தும் இலவசம். இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்ய <