News July 8, 2025
தென்காசியில் பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

தென்காசி, சங்கரன்கோவில் அருகே நெடுங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் (விவசாயி). நேற்று இரவு தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்ற போது, வாய்க்காலில் கிடந்த கட்டுவிரியன் பாம்பு மீது கால் வைத்ததால் மாரியப்பன் காலில் கடித்தது. உடனே அவரது உறவினர்கள் மாரியப்பனை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாரியப்பன் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News August 23, 2025
தென்காசி: மாணவர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள பி.வ, மி.பி.வ மற்றும் சீம இன (BC,MBC/DNC) மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 2025 – 2026ம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தகவல்.
News August 23, 2025
அடையாளம் தெரியாத நபர் கடையநல்லூர் போலீசார் தகவல்

கடையநல்லூர் அருகே அச்சம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் மயங்கிய நிலையில் இருந்த நபரை அருகில் உள்ளவர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யார் இவர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. இவரைப் பற்றி அடையாளம் தெரிந்தால் கடையநல்லூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க இந்த 9498101800 தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 23, 2025
தென்காசி: 10th PASS ரூ.71,000 சம்பளத்தில் அரசு வேலை!

தென்காசி இளைஞர்களே, தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் 56 காலியிடங்கள் உள்ளன. இப்பணிகளுக்கு 10th, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். <