News July 8, 2025

கடலூர் அருகே தந்தை திட்டியதால் மாணவன் தற்கொலை

image

நடுவீரப்பட்டு அருகே சிலம்பிநாதன் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகன் பாலகிருஷ்ணன் (20). இவர் பண்ருட்டி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மாணவன் சரிவர கல்லூரி செல்லாத காரணத்தால், தட்சிணாமூர்த்தி மாணவனை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த அவர், சம்பவத்தன்று தனது வீட்டின் அருகில் இருந்த தோப்பில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Similar News

News July 8, 2025

விபத்து தொடர்பாக மன்னிப்பு கோரிய ரயில்வே நிர்வாகம்

image

கடலூர், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் விபத்து தொடர்பாக ரயில்வே நிர்வாகம் தற்போது மன்னிப்பு கோரியுள்ளது.

News July 8, 2025

கடலூர் ஆட்சியர் மீது தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு

image

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் பகுதியில் இன்று (ஜூலை.8) காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ‘செம்மங்குப்பத்தில் சுரங்கப்பாதை அமைக்க கடந்த ஒரு வருடமாக ஆட்சியர் அனுமதி வழங்கவில்லை’ என தெற்கு ரயில்வே நிர்வாகம் பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

News July 8, 2025

கடலூர் ரயில் விபத்து: ரயில்வே சார்பில் நிவாரணம்

image

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் ரயில் விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த குழந்தைகளுக்கு நிவாரணமாக தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயம் அடைந்த மாணவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

error: Content is protected !!