News April 5, 2024
மதுரையில் ஜிம் உரிமையாளரிடம் பண மோசடி

மதுரை கேகே. நகரில் ஜிம் நடத்தி வரும் மனோஜ் பாபு என்பவரிடம் ஜவஹா்லால்புரத்தைச் சேர்ந்த ஐசக் அப்பாஸ் தொழில் செய்வதாகக் கூறி முதலீடாக ரூ.57.52 லட்சத்தை பெற்றுள்ளார். பின்னர் ரூ.18 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்து விட்டு மீதமுள்ள பணத்தை தராமல் மோசடி செய்துள்ளார். இதுகுறித்த புகாரில் மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் ஐசக் மீது மோசடி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Similar News
News February 18, 2026
மதுரை: கல்லூரி மாணவர் தற்கொலை

கத்தப்பட்டி அருகே பூசாரிபட்டியை சேர்ந்தவர் அய்யாச்சி மகன் சுதீஷ்(19). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு ஒழுங்காக செல்லாமல், நண்பர்களுடன் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்ததனால் மன உளைச்சல் அடைந்த சுதீஷ் வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
*தற்கொலை தீர்வல்ல..! அழையுங்கள் – 104*
News February 18, 2026
மதுரையில் நிலம் வாங்குறீங்களா? இதை தெரிஞ்சுகோங்க!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. மதுரை மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய இங்கே <
News February 18, 2026
மதுரை: குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ரூ.4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை பெற வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது. நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHARE IT


