News July 8, 2025
தவாக நிர்வாகி கொலை வழக்கில் 11 பேர் சரணடைந்துள்ளனர்

செம்பனார்கோயில் அருகே தவாக நிர்வாகி மணிமாறனை வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அறிவாளால் வெட்டி கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட டிஎஸ்பி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய பிரபாகரன் வீரமணி குணசேகரன் முருகன் உள்ளிட்ட 4 பேர் பாலையூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். மேலும் 7 பேர் வளவனூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
Similar News
News July 8, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்வு எழுதும் 15,880 பேர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 12.7.2025 சனிக்கிழமை நடைபெற உள்ள குரூப் 4 தேர்வில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 52 தேர்வு கூடங்களில் மொத்தம் 15880 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்வு எழுதுபவர்களுக்கு பேருந்து வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அவசர தேவைக்காக 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News July 8, 2025
வரலாற்று சிறப்புடைய மயிலாடுதுறை

மயிலாடுதுறை அரசாங்க பதிவுகளில் பல ஆண்டுகளாக மாயவரம் என்றே இருந்துள்ளது. பின்பு இவ்வூர், “மயிலாடுதுறை” என்று எம். ஜி. ஆர் ஆட்சிக் காலத்தில் தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. “ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாது” என்ற சிறப்பை பெற்றுள்ள இந்நகரம், விவசாயம், மீன்பிடி என இரு வேறு தொழில் வளங்களை கொண்டுள்ள ஒரு சிறப்பு மாவட்டமாகும். ஷேர் பண்ணுங்க
News July 8, 2025
மயிலாடுதுறையில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை (ஜூலை 9) புதன்கிழமை காலை 11:00 மணிக்கு நாகை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ரோணிக்ராஜ் தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது மின்சாரம் தொடர்பான குறைகளை பொறியாளரிடம் தெரிவித்து பயன்பெறலாம் என அழைப்பு விடுத்துள்ளனர்