News July 7, 2025
மாமியாரை கர்ப்பமாக்கிய மருமகன்… விநோதம்!

இந்தோனேசியாவில் இந்த விநோத சம்பவம் நடந்துள்ளது. 21 வயது மனைவியுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திவந்த நபர், திடீரென விவாகரத்து செய்துள்ளார். மாமியாரின் வயிற்றில் இவரின் குழந்தை வளர்வது தெரிய வந்ததால் ஏற்பட்ட குடும்ப சிக்கலே இதற்கு காரணம். மனைவிக்கு இப்போது இவர் வளர்ப்பு தந்தை. இதனால் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, மாமியாரை திருமணம் செய்துகொண்டார். இப்போது குழந்தையும் பிறந்துவிட்டதாம்.
Similar News
News July 8, 2025
மசூத் அசாரை ஒப்படைக்க தயார்: பாக்., Ex அமைச்சர்

ஹபீஸ் சயீத், மசூத் அசார் ஆகியோரை நாடு கடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாக்., முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். விரிவான பேச்சுவார்த்தை நடத்தினால் நிச்சயம் இதெல்லாம் நடக்கும் என்றும், ஆனால் இதற்காக சரியான ஆதாரங்களை சமர்ப்பிப்பதும், எல்லை தாண்டி தீவிரவாதத்தில் ஈடுபட்டார் என்பதை நிரூபிக்க சாட்சியம் அளிக்க இந்தியாவில் இருந்து நபர்கள் வருவதும் முக்கியம் எனவும் கூறியுள்ளார்.
News July 8, 2025
யஷ் தயாள் மீது பரபரப்பு FIR!

RCB வீரர் யஷ் தயாள் மீது உ.பி.யில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. காஜியாபாத்தை சேர்ந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், அவர் மீது இந்த FIR பதியப்பட்டுள்ளது. யஷ் தயாள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. முதல்வர் குறை தீர்க்கும் போர்டல் மூலம் இளம் பெண் ஒருவர் அவர் மீது, பாலியல் குற்றச்சாட்டு புகார்கள் வைத்துள்ளார்.
News July 8, 2025
சுவாமிக்கு சாற்றும் மாலையை பக்தர்கள் அணியலாமா?

கடவுளின் சன்னதிக்குச் சென்ற அனைத்து பொருள்களுமே புனிதம் பெற்றுவிடும். அந்தவகையில், சன்னதியில் குடிகொண்டிருக்கும் தெய்வங்களுக்கு சாற்றப்படும் மாலைகளும் புனிதம் பெறும். அதனை பக்தர்களுக்கு அளிக்கும்போது அவர்களின் கடவுள் நம்பிக்கை மேலும் வலுப்பெறும். தனிநபர் (அ) வாகனங்கள் ஆகியவற்றுக்கு மாலை அணியும்போது, நமக்கான உத்வேகம் அதிகரிக்கும். தொடங்கும் காரியங்களும் நல்ல பலன்களை அளிக்கும்.