News April 5, 2024
லாலு பிரசாத் யாதவுக்கு பிடி வாரண்ட்

பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு க்வாலியர் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. 30 ஆண்டுகள் பழமையான வழக்கிற்கு தேர்தல் நேரத்தில் பிடி வாரண்ட் வழங்கப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 1995ஆம் ஆண்டு லாலு முதல்வராக இருந்தபோது ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்கில் தற்போது பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 21, 2025
மிகவும் மோசமான சூழ்நிலை.. ஸ்டாலின் வேதனை

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்று CM ஸ்டாலின் மீண்டும் முழங்கியுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் தான். கருணாநிதி ஆட்சியின்போது இருந்ததைவிட, தற்போது மோசமான சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது என வேதனை தெரிவித்த அவர், மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் தெளிவான முயற்சிகளுக்காக மத்திய அரசு ஆளுநர்களை பயன்படுத்துவதாக குற்றம் குற்றம் சாட்டினார்.
News April 21, 2025
KKR Vs GT: அதிரப்போகும் களம்.. வெற்றி பெறப்போவது யார்?

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் KKR Vs GT அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் KKR-க்கு இப்போட்டி மிக முக்கியமானது. சொந்த மைதானத்தில் போட்டி நடைபெறவிருப்பதால், அந்த அணி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது. ஆனால், பேட்டிங், பீல்டிங், பவுலிங் என அனைத்திலும் GT வலுவாக இருப்பதால், இன்றைய போட்டி பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.
News April 21, 2025
இனி டிரைவர், கண்டக்டரும் பயோமெட்ரிக் வைக்கணும்

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் கட்டாயம் என்று TNSTC அறிவித்துள்ளது. ஊழியர்கள் சிலர் சரியான நேரத்தில் பணிக்கு வருவதில்லை. இதை கட்டுப்படுத்தும் நோக்கில், டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் பயோமெட்ரிக் மூலமாகவே வருகையை பதிவு செய்ய வேண்டும்; இதை கணக்கிட்டு மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என கூறியுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.