News July 7, 2025

சாமிதோப்பில் கொலை செய்யப்பட்டவர் குறித்து தகவல் தெரிவிக்கவும்

image

தென்தாமரை குளம் அருகே சாமி தோப்பில் கடந்த 5ம் தேதி ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது இதுவரையிலும் தெரியவில்லை. இதனை தொடர்ந்து தென்தாமரைகுளம் போலீசார் இறந்து போனவர் படத்தை வெளியிட்டு தகவல் தெரிவிக்க கூறி அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு சமூக வலைதளங்கள் மூலமாகவும் சுவரொட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

Similar News

News July 9, 2025

வளமான வாழ்வு பெற கேரளபுரம் விநாயகரை வழிபடுங்க!

image

புதன் அன்று வழிபட வேண்டிய தெய்வம் விநாயகர். நமது கன்னியாகுமரி மாவட்டம், கேரளபுரத்தில் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவராக விநாயகர் அருள்பாலிக்கிறார். தை – ஆனி மாதத்தில் வெள்ளை நிறத்திலும், ஆடி – மார்கழி வரை கருப்பு நிறத்திலும் விநாயகர் நமக்கு காட்சியளிப்பார். கேரளபுரம் விநாயகரை மனதார பிரார்த்தனை செய்தால் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி வளமான வாழ்வு கொடுக்கும் அற்புத திருத்தலம். SHARE பண்ணுங்க!

News July 9, 2025

ரெஜிமோன் மத போதகர் குறித்து Whatsappல் புகார் அளிக்கலாம்

image

கன்னியாகுமரி, தக்கலை அருகே 26 வயது இளம்பெண் ஒருவர் ஜெபக்கூடத்திற்கு சென்ற போது பாலியல் தொல்லை கொடுத்ததாக மத போதகர் ரெஜிமோன் என்பவர் கைது செய்யபட்டுள்ளார். போதகர் மீது வழக்கு பதிவு செய்யபட்ட நிலையில் வேறு யாராவது பாதிக்கபட்டிருந்தால் பெண்கள் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்க தேவையில்லை மாவட்ட எஸ்பி whatsapp எண்ணுக்கு 8122223319 இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது.

News July 9, 2025

விவேக் எக்ஸ்பிரஸ் போக்குவரத்தில் மாற்றம்

image

இருகூர், பீளமேடு பிரிவில் சாலை மேம்பால பணிகள் நடைபெறுவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி – திப்ரூகார் விவேக் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியில் இருந்து ஜூலை 9, 10, 11, 12 தேதிகளில் புறப்படுவது போத்தனூர் வழியாக செல்லும். இருகூர் மற்றும் கோயம்புத்தூர் செல்லாது. போத்தனூரில் கூடுதல் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

error: Content is protected !!