News July 7, 2025

நாகையில் ஊராட்சிக்கு ரூ.1 கோடி பெற அழைப்பு!

image

நாகை மாவட்டத்தில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் கடைபிடிக்கும் ஊராட்சிக்கு விருது மற்றும் ரூ.1 கோடி தமிழக அரசால் அளிக்கப்பட உள்ளது. தகுதியான ஊராட்சிகள் உரிய ஆவணங்களுடன் நாகை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன அலுவலகத்தில் வருகின்ற ஜூலை 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் பா. ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.

Similar News

News August 22, 2025

நாகையில் ஃபாஸ்ட் ஃபுட் தயாரிக்க இலவச பயிற்சி!

image

நாகை ஐஒபி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் ஃபாஸ்ட் ஃபுட் தயாரிக்க இலவச பயிற்சி வருகிற ஆக.28ம் தேதி முதல் அளிக்கப்பட உள்ளது. 12 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தொழில் தொடங்க வங்கி கடனுதவி ஏற்பாடு செய்யப்படும். முன்பதிவிற்கு 6374005365 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். SHARE IT!

News August 22, 2025

நாகையில் அப்பா அம்மா மகனுக்கு ஆயுள் தண்டனை

image

நாகை மாவட்டம் முட்டம் கிராமத்தை சேர்ந்த பரமசிவம், மனைவி பாக்கியவதி, மகன் மகாதேவன் ஆகியோர், அதே பகுதியை சேர்ந்த நரசிங்கமூர்த்தி என்பவரை கடந்த 2022ல் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதுகுறித்த வழக்கில் நாகை மாவட்ட நீதிபதி கந்தகுமார் நேற்று தீர்ப்பளித்தார். அப்போது பரமசிவம், பாக்கியவதி, மகாதேவன் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

News August 22, 2025

நாகை மக்களே.. அரசு வங்கியில் வேலை! APPLY NOW

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் & சிந்து வங்கியில், தமிழத்தில் காலியாக உள்ள 85 ‘Local Bank Officer’ பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து, வரும் செப்.4-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.48,480 – 85,920/- வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் நபர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!