News July 7, 2025

இன்னொரு ரிதன்யாவா?… சென்னை பெண்ணுக்கு சோகம்

image

வரதட்சணை கொடுமையால் திருப்பூர் ரிதன்யாவை இழந்த சோகமே இன்னும் மறையவில்லை. இந்நிலையில், சென்னை பெண் வழக்கறிஞர் ஒருவர் திருமணமான 4 மாதங்களில் மர்மமாக உயிரிழந்திருக்கிறார். 100 சவரன் நகைகள், ₹4 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருள்கள் கொடுத்தும் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக பெண்ணின் பெற்றோர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். வரதட்சணை கொடுமையால் இன்னும் எத்தனை உயிர்கள் போகுமோ?

Similar News

News September 9, 2025

மீண்டும் மறுப்பு.. நீதிமன்றத்தை நாடும் தவெக?

image

தனது பிரசார பயணத்தை திருச்சியில் இருந்து துவங்கவிருக்கிறார் தவெக தலைவர் விஜய். இதற்காக போலீஸாரிடம் அனுமதி கேட்கப்பட்டு வருகிறது. ஆனால், பிரசார இடத்தை மாற்ற வேண்டும், பேசும் நேரத்தை குறைக்க வேண்டும், மாற்று சாலைகளில் ரோடு ஷோ செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்படுகிறதாம். இந்நிலையில், இது அரசியல் உள்நோக்கோடு கூறப்படுவதாக கருதும் தவெக, நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News September 9, 2025

தோனியின் ஒன் லைன் மந்திரம் இதுதான்

image

சர்வதேச போட்டிகளில் இருந்து எப்போதோ ஓய்வு பெற்றாலும், தோனியின் விளையாட்டு நுட்பங்கள் இன்றுவரை பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், CSK வீரர் நூர் அகமது தோனி பற்றிய சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். ‘சூழ்நிலையை அறிந்துகொண்டு, அதற்கு தேவையானதைச் செய்’ என்றே தோனி அறிவுறுத்துவார் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், IPL-ல் ஆட்ட நாயகன் விருது வென்றதை விட MSD-ன் கீழ் விளையாடியதே சிறந்தது என்றார்.

News September 9, 2025

விலை குறைப்பு.. அரசு புதிய அறிவிப்பு

image

GST குறைப்பால் கார், டூ வீலர் உள்ளிட்டவை எவ்வளவு விலை குறைகிறது என கடைகளின் முன் விலை பட்டியலை விளம்பரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. PM மோடியின் போட்டோவுடன் இந்த விளம்பரங்கள் இருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. விலை குறித்து மக்கள் அறிய வேண்டும் என்ற நல்ல நோக்கம் இருந்தாலும், PM மோடியின் படம் இருக்க வேண்டும் என்பது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இது பற்றி உங்கள் கருத்து?

error: Content is protected !!