News July 7, 2025
நாகநாத சுவாமி கோயிலில் தேரோட்ட விழா

நாகை மாவட்டம் நாகூரில் நாகநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் 29ம் ஆண்டு ஆனி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற ஜூலை 9ம் தேதி நடைபெற உள்ளது. இதில், திரளான பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள கோவில் நிர்வாகத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 8, 2025
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வரும் ஜூலை 15ல் தொடங்கப்பட உள்ளது. இதில், ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரையில் நாகை மாவட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் 97 முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாமில் 15 துறையைச் சேர்ந்த 46 வகையான சேவைகள் வழங்கப்பட உள்ளன. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News July 7, 2025
நாகையில் ஊராட்சிக்கு ரூ.1 கோடி பெற அழைப்பு!

நாகை மாவட்டத்தில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் கடைபிடிக்கும் ஊராட்சிக்கு விருது மற்றும் ரூ.1 கோடி தமிழக அரசால் அளிக்கப்பட உள்ளது. தகுதியான ஊராட்சிகள் உரிய ஆவணங்களுடன் நாகை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன அலுவலகத்தில் வருகின்ற ஜூலை 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் பா. ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
News July 7, 2025
நாகையில் 227 மனுக்கள் பெற்ற ஆட்சியர்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 227 மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.