News July 7, 2025

அஜித்குமார் மரண வழக்கு: சிபிஐக்கு மாற்றம்

image

அஜித்குமார் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி CM ஸ்டாலின் உத்தரவிட்டிருந்த நிலையில், அது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கில் 5 காவல்துறையினர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளதால் வழக்கை சரியான திசையில் விசாரிக்க சிபிஐக்கு விசாரணையை மாற்றுவதாக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். விரைவில் இந்த வழக்கை CBI விசாரித்து, குற்றப்பத்திரிக்கையை தாக்குல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நியாயம் கிடைக்குமா?

Similar News

News July 8, 2025

கழிவுகளை நீக்கும் லெமன் டீ

image

*எலுமிச்சையில் உள்ள நுண்சத்துகள் அழற்சியை தடுத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் * இதிலுள்ள பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம், தாமிரம் உள்ளிட்ட நுண்சத்துகள் மூளையை சுறுசுறுப்பாக்கி மனம் புத்துணர்வு பெறவும் மனஅழுத்தம் நீங்கவும் உதவுகிறது *வளர்சிதை மாற்ற செயல்பாட்டை ஊக்குவிக்கிறது, கொழுப்பு சேர்வதை தடுக்கிறது, இதனால் எடை குறையும் *உடலின் நச்சுகள், கழிவுகளை நீக்குவதால் நோய்கள் தடுக்கப்படும்.

News July 8, 2025

கில்லிடமிருந்து இங்கி., வீரர் கற்க வேண்டும்: வாகன்

image

தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி, இங்கி., அணிக்காக விளையாடுவதே ’அதிர்ஷ்டம்’ என விமர்சித்துள்ளார் மைக்கல் வாகன். 56 போட்டிகளில் 31 தான் கிராவ்லியின் சராசரி, சுப்மன் கில் இத்தொடருக்கு வரும்போது 35 என்ற சராசரியில் இருந்தார், தற்போது 42-ஆக உயர்ந்துள்ளது. முதலில் தற்காப்பில் கவனம் செலுத்தி, பின்னர் மோசமான பந்துகளை தாக்கினார். இதனை கிராவ்லி கில்லிடமிருந்து கற்க வேண்டுமென்றார்.

News July 8, 2025

திருப்புவனம் போல் மற்றுமொரு தாக்குதல் நடத்திய போலீஸ்

image

திருப்புவனம் அஜித் மீது போலீஸ் தாக்குதல் சம்பவம் இன்னும் தணியாத நிலையில் தற்போது மற்றொரு சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. கோவில் இடத்தில் வீடு கட்டுவதற்கு பொன்ராஜ் என்பவர் ஈடுபட்டுள்ளார். இதனை தங்கபாண்டி என்பவர் எதிர்த்துள்ளார். விவகாரம் காவல் நிலையம் சென்றதால், வேடசந்தூர் போலீசார் தங்கப்பாண்டி வீட்டிற்கே சென்று அவருடைய மனைவி, மகனை கடுமையாக தாக்கியுள்ளார்கள்.

error: Content is protected !!