News July 7, 2025

பின்லாந்து நாட்டில் கோவை மாணவர்கள்

image

பின்லாந்து நாட்டில் டர்கூ பல்கலை சார்பில் 32வது சர்வதேச மாநாடு(இன்று) ஜூலை.7 முதல் 10 வரை நடைபெற உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளின் சிறந்த பல்கலையில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர். அதன்படி கோவை பாரதியார் பல்கலை தாவரவியல் துறை ஆராய்ச்சி மாணவர்கள் பெனடிக்ட் மேத்யூஸ் பால் மற்றும் கவுதம் கண்ணன் ஆகியோர் இம்மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க தேர்வாகியுள்ளனர்.

Similar News

News July 7, 2025

கோவை:இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (07.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 7, 2025

கோவை: கட்சி நிர்வாகிகளிடம் பிக் பாக்கெட்

image

மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் இபிஎஸ் இன்று சாமி தரிசனத்திற்கு பின்னர், விவசாயிகள், நெசவாளர்கள் இடையே கலந்துரையாடினார். அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி அதிமுக காரமடை ஒன்றிய பொருளாளர் தங்கராஜ் என்பவரிடம் ரூ.1 லட்சம், நெல்லித்துறை ஆனந்த் என்பவரிடம் ரூ.1 லட்சம் என ரூ.2 லட்சத்தை மர்ம நபர், பிக் பாக்கெட் அடித்து சென்றுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News July 7, 2025

கோவையில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு!

image

கோவையில் 6 – 18 வயது வரையிலான பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான கணக்கெடுப்புப் பணி ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த புதிய கணக்கெடுப்பு, மேலும் பல குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்குக் கல்வி வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!