News July 7, 2025
இளைஞர்களுக்கு மீன்வளர்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி

சூரக்கோட்டையில் கிராமப்புற இளைஞர்களுக்கு மீன் வளர்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி வருகிற 9ந் தேதி முதல் அளிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்கும் விவசாயிகள் முன்பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வருகிற 9-ந்தேதி தொடங்கி 6 நாட்களுக்கு (சனி,ஞாயிறு தவிர) நடைபெறுகிறது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு படித்த விவசாயிகள் பங்கு பெறலாம்.
Similar News
News August 24, 2025
தஞ்சை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. 1 குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தஞ்சை மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். ஷேர் பண்ணுங்க
News August 24, 2025
தஞ்சை: இளைஞர்கள் செய்த சுவாரசிய செயல்

தஞ்சாவூர் மாவட்டம் சிலத்தூர் அருகே உள்ள கிளாமங்கலத்தில் பெண் வீட்டார், மாப்பிள்ளை பற்றி விசாரிக்க வரும் பொழுது கிராமவாசிகள் மாப்பிள்ளையை பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவிப்பதால் பெண் வீட்டார் பெண் தர மறுப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுபோன்ற செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டுமென கூறி அப்பகுதி இளைஞர்கள், எச்சரிக்கை போஸ்டர் ஒட்டி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பேசு பொருளாக மாறியுள்ளது. SHARE NOW
News August 24, 2025
தஞ்சாவூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் (23.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யவும். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!