News July 7, 2025
பக்தர்களின் பசியாற்ற தவமிருக்கும் தமிழழகன்

செந்திலாண்டவரின் பாதங்களில் உங்களின் கண்ணீரை வைக்க, அவர் உங்களுக்கு உப்புக்காற்றைக் கூட திகட்டவைக்கும்படி வாழ வைப்பார். அப்படிப்பட்ட திருச்செந்தூர் கோயிலின் ராஜகோபுரத்தில் உள்ள பல சிற்பங்களில் முனிவர்களின் சிற்பமும் உண்டு. முக்கியமாக, முனிவர்கள் அமர்ந்து சாப்பிடும் சிற்பம் இங்கு காணப்படுகிறது. இதனாலேயே இக்கோயிலில் 3 வேளையும் அன்னதானம் மூலமாக பசியாற்றுகிறார் என்னழகன் வேலவன்!
Similar News
News July 7, 2025
பதவி நீக்கம்.. சில மணி நேரத்தில் அமைச்சர் தற்கொலை

ரஷ்யாவில் அதிபர் புதினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் சில மணிநேரங்களிலேயே தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உக்ரைனின் தாக்குதல் காரணமாக ரஷ்யாவில் விமான சேவை பாதிக்கப்பட்டதால் அந்த துறையின் அமைச்சர் ரோமன் ஸ்டாரோவாய்ட்டை புதின் பதவி நீக்கம் செய்தார். இதனையடுத்து, காருக்குள் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தன்னைத்தானே சுட்டு ரோமன் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
News July 7, 2025
மீண்டும் போர் மூளுமா?

இஸ்ரேல் – ஈரான் போர் சற்றே ஓய்ந்துள்ள நிலையில், நேற்றிரவு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது ஏமனின் ஹூதி கிளர்ச்சிப் படை. இதையடுத்து ஏமனின் துறைமுகங்கள், மின்னுற்பத்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கியது. இதற்கு பதிலடியாக, மீண்டும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை ஹூதி நடத்தியுள்ளது. காஸாவில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், மீண்டும் மோதல்கள் நடப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
News July 7, 2025
பெண்களும் கற்றாழையும்

*கர்ப்ப காலம், பிரசவ காலத்துக்கு பிறகு பெண்களின் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் சருமச் சுருக்கங்களை நீக்கக் கற்றாழை ஜெல்லை தடவலாம். *நீர்க்கடுப்பு, நீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சல், உடல்சூடு போன்றவற்றையும் சோற்றுக்கற்றாழை குணப்படுத்தும். *கற்றாழை மடலை கீறி, அதில் வடியும் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் கலந்து ஒரு மாதம் வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். அதை தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.