News July 7, 2025

கார் மோதியதில் கணவன் மனைவி மகள் பலி

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த நீர்முளை பிரதான சாலையில் கார் மோதி இரு சக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி மகள் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு இரு சக்கர வாகனத்தில் மருதம்பட்டினத்தை சேர்ந்த அருள்பிரகாஷ் தனது மனைவி பெரியநாயகி 7 வயது மகள் ஆகிய மூன்று பேர் உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News July 7, 2025

நாகநாத சுவாமி கோயிலில் தேரோட்ட விழா

image

நாகை மாவட்டம் நாகூரில் நாகநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் 29ம் ஆண்டு ஆனி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற ஜூலை 9ம் தேதி நடைபெற உள்ளது. இதில், திரளான பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள கோவில் நிர்வாகத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News July 7, 2025

வேளாங்கண்ணி பேராலயத்தில் கொடியேற்றம்!

image

நாகை மாவட்டம் உலகப் புகழ்பெற்ற கிறிஸ்தவ பேராலயமான வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் புனித கார்மேல் அன்னை திருவிழாவானது இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அன்னையின் திருக்கொடி பவனியானது கடற்கரைச் சாலை வழியாக வந்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. இதில், தமிழ் நாடு மட்டுமின்றி வெளிமாநில பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

News July 7, 2025

நாகை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800-425-6000. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!