News July 7, 2025
கோடியக்கரை சரணாலயத்தின் சிறப்பம்சங்கள்!

நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த பசுமை மாறாக்காட்டில் புள்ளிமான், வெளிமான், நரி, பன்றி, மயில் உள்ளிட்ட விலங்குகள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன. இந்த காட்டில் 154 மூலிகை உள்ளிட்ட 271 வகையான தாவர வகைகள் உள்ளன. ராமாயணத்தில் இங்கு நின்று ராமர் இலங்கையை பார்த்த இடம், ராமர் பாத நினைவிடமாக தொல்பொருள் ஆராய்ச்சித்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News July 7, 2025
நாகநாத சுவாமி கோயிலில் தேரோட்ட விழா

நாகை மாவட்டம் நாகூரில் நாகநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் 29ம் ஆண்டு ஆனி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற ஜூலை 9ம் தேதி நடைபெற உள்ளது. இதில், திரளான பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள கோவில் நிர்வாகத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News July 7, 2025
வேளாங்கண்ணி பேராலயத்தில் கொடியேற்றம்!

நாகை மாவட்டம் உலகப் புகழ்பெற்ற கிறிஸ்தவ பேராலயமான வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் புனித கார்மேல் அன்னை திருவிழாவானது இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அன்னையின் திருக்கொடி பவனியானது கடற்கரைச் சாலை வழியாக வந்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. இதில், தமிழ் நாடு மட்டுமின்றி வெளிமாநில பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
News July 7, 2025
நாகை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <