News July 7, 2025

நிர்வாகிகள் மதிப்பதில்லை என புலம்பிய நயினார் நாகேந்திரன்

image

கட்சி நிர்வாகிகளை செல்போனில் தொடர்பு கொண்டால் சிலர் மதிப்பதில்லை; ஒரு வணக்கம் கூட சொல்வதில்லை என நயினார் நாகேந்திரன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பாஜக தலைவரான பிறகும் கட்சியில் அவருக்கு உரிய மரியாதை இல்லை என பேசப்படும் நிலையில், நயினாரின் பேச்சு அதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தலைவர் பதவியில் இருந்து விலகி, அரியணையை அண்ணாமலைக்கு கொடுங்கள் என சிலர் கருத்து கூறி வருகின்றனர்.

Similar News

News September 8, 2025

பறிபோகிறதா பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனின் பதவி?

image

TN சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்தது ஏன் என அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இவ்விவகாரத்தில், அரசு அனுப்பிய டிஜிபி பரிந்துரை பட்டியலை விரைந்து பரிசீலிக்க வேண்டும் என UPSC-க்கு SC ஆணையிட்டுள்ளது. மேலும், UPSC-ன் பரிந்துரை அடிப்படையில் டிஜிபியை நியமனம் செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

News September 8, 2025

அரை முழம் பூவுக்கு ₹1.14 லட்சம்.. அதிர்ந்த நவ்யா நாயர்!

image

விமான நிலையத்திற்கு அரை முழம் பூ வைத்து கொண்டு வந்ததால், நடிகை நவ்யா நாயருக்கு ₹1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸி.யில் உயிரியல் பாதுகாப்பு சட்டங்களின் கீழ், வெளிநாடுகளிலிருந்து தாவர பொருட்களைக் கொண்டு வருவது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மெல்பேர்ன் விமான நிலைய அதிகாரிகள் அவருக்கு, இந்த அபராதத்தை விதித்துள்ளனர். இருந்தாலும், அரை முழத்துக்கு ₹1.14 லட்சம் கொஞ்சம் ஓவர்தான்!

News September 8, 2025

டிடிவியின் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் பதில்

image

NDA கூட்டணியில் இருந்து அமமுக விலக, தான் காரணம் என்று எந்த அடிப்படையில் டிடிவி கூறுகிறார் என தெரியவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். NDA கூட்டணியில் தலைவராக EPS-ஐ, தான் அறிவிக்கவில்லை என்றும், பூத் கமிட்டி கூட்டத்தில் EPS முதலமைச்சராக வேண்டுமென அண்ணாமலை தான் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனக்கும் டிடிவிக்கும் எந்த தனிப்பட்ட பிரச்னையும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

error: Content is protected !!