News July 7, 2025
பிரிக்ஸ் மாநாட்டில் பாகிஸ்தானை விளாசிய மோடி

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும், ஆதரவாளர்களையும் ஒரே மாதிரி பார்க்கக்கூடாது என பிரிக்ஸ் மாநாட்டில் PM மோடி பேசியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை மறைமுகமாக சாடிய அவர், தீவிரவாத தடுப்பு என்பது வெறும் கண்துடைப்பாக இல்லாமல் கடுமையான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அதோடு காஸா நிலை குறித்தும் கவலை தெரிவித்துள்ளார்.
Similar News
News September 8, 2025
டிடிவியின் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் பதில்

NDA கூட்டணியில் இருந்து அமமுக விலக, தான் காரணம் என்று எந்த அடிப்படையில் டிடிவி கூறுகிறார் என தெரியவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். NDA கூட்டணியில் தலைவராக EPS-ஐ, தான் அறிவிக்கவில்லை என்றும், பூத் கமிட்டி கூட்டத்தில் EPS முதலமைச்சராக வேண்டுமென அண்ணாமலை தான் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனக்கும் டிடிவிக்கும் எந்த தனிப்பட்ட பிரச்னையும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
News September 8, 2025
இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானி கைது

ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியை ஒட்டிய இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானி கைது செய்யப்படுள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சிராஜ் கான் என்ற அந்த நபர், இந்திய எல்லைக்குள் நுழைவதை கண்டு முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பின்னர் அவரை பிடித்த ராணுவம், அவரிடம் இருந்து பாகிஸ்தான் பணத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
News September 8, 2025
அடுத்த கிரகணம் எப்போது தெரியுமா?

நேற்றிரவு, முழு சந்திர கிரகணம் நிகழ்ந்த நிலையில், அடுத்த 2 வாரத்திற்குள் மற்றுமொரு கிரகணம் நிகழவுள்ளது. இந்த மாதம் 21-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று சூரிய கிரகணம் நிகழவுள்ளது. சரியாக 21-ம் தேதி இரவு 11 மணிக்கு தொடங்கி, 22-ம் தேதி அதிகாலை 3.23 மணி வரை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதனை இந்தியாவில் காணமுடியாது. நியூசிலாந்து & ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தெளிவாகக் தெரியும்.