News July 7, 2025
வரலாற்றில் இன்று நடந்தது என்ன?

1456ம் ஆண்டு – ஜோன் ஆஃப் ஆர்க் குற்றமற்றவர் என அவர் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டது.1575ம் ஆண்டு – இங்கிலாந்துக்கும் ஸ்காட்லாந்துக்கும் இடையே கடைசிப் பெரும் போர் ரீட்சுவயர் என்ற இடத்தில் இடம்பெற்றது.1799ம் ஆண்டு – பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங்கின் படையினர் லாகூரை அடுத்துள்ள பகுதிகளைப் பிடித்தனர்.1865ம் ஆண்டு – ஆபிரகாம் லிங்கன் கொலை தொடர்பான நால்வர் தூக்கிலிடப்பட்டனர்.
Similar News
News September 8, 2025
அதிமுக ICU-வில் அட்மிட்டாகும் நிலை ஏற்படும்: உதயநிதி

EPS-ன் பரப்புரையின் போது, ஆம்புலன்ஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சுட்டிக்காட்டி, உதயநிதி கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். ஆம்புலன்ஸில் செல்லும் நிலையை அதிமுகவிற்கு மக்கள் உருவாக்குவார்கள் எனக் கூறிய அவர், விரைவில் ICU-வில் தான் அதிமுக அனுமதிக்கப்படும் என்றார். உங்களை காப்பாற்றும்(EPS-ஐ) பணியையும் CM ஸ்டாலின் தான் செய்வார் எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
News September 8, 2025
பறிபோகிறதா பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனின் பதவி?

TN சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்தது ஏன் என அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இவ்விவகாரத்தில், அரசு அனுப்பிய டிஜிபி பரிந்துரை பட்டியலை விரைந்து பரிசீலிக்க வேண்டும் என UPSC-க்கு SC ஆணையிட்டுள்ளது. மேலும், UPSC-ன் பரிந்துரை அடிப்படையில் டிஜிபியை நியமனம் செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
News September 8, 2025
அரை முழம் பூவுக்கு ₹1.14 லட்சம்.. அதிர்ந்த நவ்யா நாயர்!

விமான நிலையத்திற்கு அரை முழம் பூ வைத்து கொண்டு வந்ததால், நடிகை நவ்யா நாயருக்கு ₹1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸி.யில் உயிரியல் பாதுகாப்பு சட்டங்களின் கீழ், வெளிநாடுகளிலிருந்து தாவர பொருட்களைக் கொண்டு வருவது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மெல்பேர்ன் விமான நிலைய அதிகாரிகள் அவருக்கு, இந்த அபராதத்தை விதித்துள்ளனர். இருந்தாலும், அரை முழத்துக்கு ₹1.14 லட்சம் கொஞ்சம் ஓவர்தான்!