News July 7, 2025
ஈரோடு அருகே தகராறில் ஒருவர் உயிரிழப்பு!

ஈரோடு, முகாசிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டவன் 50. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் நேற்று போதையில் நடந்த தகராறில் கைகலப்பு ஏற்பட்டதில், ஆண்டவன் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பி ஓடிய கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News July 7, 2025
ஈரோடு: இலவசமாக கம்பியூட்டர் டேலி (Tally) பயிற்சி

ஈரோடு, சித்தோடு கனரா வங்கி ஊரக சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக ஜூலை 07 முதல் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை இருபாலருக்கும் இலவசமாக கம்பியூட்டர் டேலி(Tally) பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சி, சீருடை, உணவு, விடுதி வசதி அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும் என பயிற்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விபரங்களுக்கு 0424-2400338 என்ற எண்னை தொடர்பு கொள்ளவும்.
News July 7, 2025
கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம் வாலிபர் கைது

ஈரோடு வீரப்பன் சத்திரம் அருகே தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர் தமிழ்ச்செல்வன் (31), இவரது வீட்டின் அருகில் தனியாக இருந்த மாணவியை கத்தியை காட்டி பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடி விட்டார். பின்னர் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தமிழ்ச்செல்வனை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News July 6, 2025
ரூ.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E/B.Tech முடித்தவர்கள் <