News July 7, 2025

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை கொள்ளை

image

திண்டுக்கல் வாழைக்காய்பட்டி வாசிமலை நகர் பகுதியில், ஆதிமூலம் மற்றும் அவரது மனைவி சுமதி வீட்டை பூட்டி விட்டு, மகளின் பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனை சென்ற போது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து புகுந்து, பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க நகையை திருடியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News July 7, 2025

திண்டுக்கல்: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் மானியம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் பின் தங்கிய பகுதிகளான குஜிலியம்பாறை, நத்தம், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, வடமதுரை, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக தொடங்கும் தொழிலுக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. மேலும், உபகரணங்கள் செலவில் 50% ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்கு பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும். மேலும் விவரங்களுக்கு திண்டுக்கல் தொழில் மையம்( 8925533943)ஐ அணுகலாம்.

News July 7, 2025

திண்டுக்கல்: பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்!

image

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே நேற்று(ஜூலை 6) நடைபெற்ற வாரச் சந்தையில் வில்பட்டி ஊராட்சி, புலியூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் காய்கறிகளை வாங்கிக் கொண்டு ஜீப்பில் புலியூருக்கு திரும்பியபோது.
கோவில்பட்டி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் அருகிலுள்ள சுமாா் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஜீப்பை ஓட்டிச் சென்ற குழந்தைராஜ் (38) உட்பட 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News July 7, 2025

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி படு தோல்வி!

image

திண்டுக்கல்லில் இன்று(ஜூலை 6) மாலை தொடங்கிய டிஎன்பிஎல் இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 5 விக்கெட்களை இழந்து 220 ரன்களை குவித்தது. இதைத்தொடர்ந்து, திண்டுக்கல் டிராகன்ஸ் 14.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 102 ரன்கள் மட்டுமே திரட்டி படுதோல்வியடைந்தது.
இதன்மூலம், முதல்முறையாக டிஎன்பிஎல் சாம்பியன் பட்டத்தை திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.

error: Content is protected !!