News July 7, 2025

சர்வதேச வளர்ச்சியில் தெற்கின் பங்கு என்ன? மோடி பேச்சு

image

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். மாநாட்டில் அமைதி, பாதுகாப்பு மற்றும் உலகளாவிய ஆளுமை சீர்திருத்தத்திற்கான அமர்வில் உரையாற்றினேன் என X-ல் PM மோடி பதிவிட்டுள்ளார். உலக வளர்ச்சிக்கு முன்பு இருந்ததை விட தெற்குலகின் குரல் ஏன் மிகவும் முக்கியமானது என்பது குறித்து தனது பார்வைகளைப் பகிர்ந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News September 8, 2025

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம்

image

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா, நிரந்தரமாக நீக்கப்படுவதாக வைகோ அறிவித்துள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக கடந்த மாதம் தற்காலிகமாக நீக்கப்பட்டு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், இன்று நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். மதிமுகவில் 32 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த மல்லை சத்யா, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

News September 8, 2025

வேளாண் விஞ்ஞானி R.S.நாராயணன் காலமானார்

image

இயற்கை வேளாண் விஞ்ஞானியும், எழுத்தாளருமான R.S.நாராயணன்(87) வயது முதிர்வு காரணமாக காலமானார். மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் பொருளாதாரம், புள்ளியியல் ஆய்வாளராக பணியாற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். மேலும், ‘வறட்சியிலும் வளமை’, ‘வாழ்வு தரும் வன வேளாண்மை’, ‘பல்லுயிர் பெருக்கம்’ உள்ளிட்ட ஏராளமான பயனுள்ள நூல்களை எழுதியுள்ளார். இறுதி சடங்கு பிற்பகல் 12 மணிக்கு திண்டுக்கல்லில் நடைபெறவுள்ளது. #RIP

News September 8, 2025

RECIPE: இந்த டிபன் சர்க்கரை நோயாளிகளுக்கு பெஸ்ட்!

image

◆ஊட்டச்சத்து நிறைந்துள்ளதால், சோள இட்லி சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகவும் உகந்தது என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
➥வெள்ளைச் சோளம், உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
➥இவற்றை இட்லி பதத்திற்கு கிரைண்டரில் போட்டு, அரைத்து கொள்ளவும்.
➥பிறகு, 8 மணி நேரம் ஊற வைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லியாக வார்த்தெடுத்தால், ருசியான சோள இட்லி ரெடி. SHARE IT.

error: Content is protected !!