News July 6, 2025

செங்கல்பட்டு வானில் சர்வதேச விண்வெளி நிலையம்: நாசா தகவல்

image

சர்வதேச விண்வெளி மையம் பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் மணிக்கு 16 முறை பூமியைச் சுற்றி வருகிறது. இந்த விண்வெளி மையத்தை சில சமயங்களில் வெறும் கண்ணால் பார்க்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 6 முதல் 10 வரை செங்கை மக்கள் இரவு 8 மணி முதல் 8.06 மணி வரை வானில் காண முடியும் என நாசா அறிவித்துள்ளது. இது ஒரு அரிய வானியல் நிகழ்வாகும். டக்குனு உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணி பாக்க சொல்லுங்க

Similar News

News July 7, 2025

பொலம்பாக்கம் இளைஞர் விபத்தில் உயிரிழப்பு

image

செங்கல்பட்டு, பொலம்பாக்கத்தைச் சேர்ந்த கங்காதரன் (27), நேற்று மதுராந்தகம் நோக்கி பைக்கில் சென்றார். சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில், தனியார் மதுபான ஆலை அருகே, அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கங்காதரன் உயிரிழந்தார். மதுராந்தகம் போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News July 7, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (06/07/25) இரவு ரோந்து பணி பார்க்கும் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களின் தொடர்புக்கு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசரம் என்றால் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள காவல் துறையினரின் நேரடி மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம். குறிப்பாக இரவு நேரம் வேலைக்கு செல்லும் பெண்கள் இத்தகைய மொபைல் எண்களை கண்டிப்பாக வைத்திருங்கள் மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் செய்யுங்கள்.

News July 6, 2025

குழந்தை பாக்கியம் அருளும் பிரசன்ன வெங்கடேச பெருமாள்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தென்திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு வைணவத் திருத்தலம். இது “தென் திருப்பதி” என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் திருப்பதியில் உள்ளது போன்றே இங்கும் சில ஐதீகங்களும், பூஜை முறைகளும் பின்பற்றப்படுகின்றன. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!