News July 6, 2025

நெல்லையில் வாகனங்கள் உரிமை கோராவிட்டால் ஏலம்

image

நெல்லையில் ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிமையாளர்கள் ஆவணங்கள், ஆதார் அட்டையுடன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஆஜராகி, அபராதம் செலுத்தி வாகனங்களை மீட்கலாம். உரிமை கோரப்படாவிட்டால், வாகனங்கள் ஏலம் விடப்படும் என குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News

News August 26, 2025

நெல்லை சீமையின் 100 ஆண்டுகள் பழமையான புகைப்படங்கள்

image

100 ஆண்டுகளுக்கு முந்தைய நெல்லை சீமை என்பது, தற்போதைய நெல்லை, தென்காசி, நாகர்கோவில் பகுதிகளை உள்ளடக்கியது. இந்த புகைப்படங்கள் 1925 ஆண்டு முதல் எடுக்கப்பட்டவை என கண்டறியப்பட்டவை. இன்று சுற்றுலா தலமாக வலம் வரும் பல இடங்களை அன்று, கூட்ட நெரிசலில் சிக்காமல் தப்பியன. இந்த புகைப்படங்களில் நெல்லை பேருந்து நிலையம், குற்றாலம், நெல்லையப்பர் கோவில் மற்றும் தெரு, திருவள்ளுவர் பாலம் உள்ளன. *ஷேர் பண்ணுங்க

News August 25, 2025

எரிவாயு உருளை நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

நெல்லை மாவட்ட அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வரும் 28ஆம் தேதி பிற்பகல் 4 மணியளவில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. எரிவாயு பதிவு செய்தல் உள்ளிட்ட குறைகளை நுகர்வோர் நேரில் தெரிவித்து பயனடையலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா தெரிவித்துள்ளார்.

News August 25, 2025

மாவட்டத்தில் இன்று இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (ஆக.25) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!