News July 6, 2025
செங்கல்பட்டில் கிராம உதவியாளர் வேலை

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும்.வரும்செப்.2ஆம் தேதி தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை(044-27427417,27427418)தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<16962666>>தொடர்ச்சி<<>>
Similar News
News July 6, 2025
செங்கல்பட்டு வானில் சர்வதேச விண்வெளி நிலையம்: நாசா தகவல்

சர்வதேச விண்வெளி மையம் பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் மணிக்கு 16 முறை பூமியைச் சுற்றி வருகிறது. இந்த விண்வெளி மையத்தை சில சமயங்களில் வெறும் கண்ணால் பார்க்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 6 முதல் 10 வரை செங்கை மக்கள் இரவு 8 மணி முதல் 8.06 மணி வரை வானில் காண முடியும் என நாசா அறிவித்துள்ளது. இது ஒரு அரிய வானியல் நிகழ்வாகும். டக்குனு உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணி பாக்க சொல்லுங்க
News July 6, 2025
குழந்தை பாக்கியம் அருளும் பிரசன்ன வெங்கடேச பெருமாள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தென்திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு வைணவத் திருத்தலம். இது “தென் திருப்பதி” என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் திருப்பதியில் உள்ளது போன்றே இங்கும் சில ஐதீகங்களும், பூஜை முறைகளும் பின்பற்றப்படுகின்றன. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!
News July 6, 2025
அச்சரபக்கம் ஏரியை காணவில்லை – மக்கள் கவலை

அச்சரப்பாக்கம் ஏரி பல ஆண்டுகளாக எந்த பராமரிக்கும் இல்லாததால் செடி கொடிகள் முட்கள் காடுகளாக மாறி காட்சியளிக்கிறது. இந்த இடம் சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்புகள் செய்யும் இடமாக மாறிவிட்டது. நீர்நிலை பறவைகள் சரணாலயமாக இருந்த இடம், அரசு கவனக்குறைவால் இப்படி மாறிவிட்டதை கண்டு பொது மக்கள் மிகவும் கவகையில் உள்ளனர். அரசு இதனை சரி செய்தால், சுற்றுலாத்தலமாக மாறலாம் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.