News July 6, 2025

வாய் திறக்காத திமுக: பிரேமலதா தாக்கு

image

அஜித் மரணத்திற்கு நீதி கேட்டு தேமுதிக சார்பில் போராட்டம் நடந்தது. இதில் பேசிய பிரேமலதா, திமுக ஆட்சியில் இதுவரை 24 கொலைகள் நடந்துள்ளது. சாத்தான்குளத்துல நடக்கும் போது வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சீங்களே, இன்னைக்கு எங்க போனீங்க என்று கேள்வி எழுப்பினார். மேலும், அஜித் மரணம் குறித்து திமுகவினர் வாயே திறக்கவில்லை, கூட்டணி தலைவர்களும் அஜித் போட்டோவிற்கு பூ போட்டுவிட்டு போய்விட்டார்கள் என சாடினார்.

Similar News

News July 6, 2025

3 நாள் STOP பண்ணுங்க… அதிசயம் நடக்கும்!

image

தொடர்ந்து ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் ஒரு 3 நாள்களுக்கு, போன் பயன்படுத்துவதை நிறுத்தினால், ஆச்சரியகரமான மாற்றம் ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளைஞர்கள் சிலரை 72 மணிநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை நிறுத்தி சோதித்தனர். அப்போது அவர்களின் மூளை அதிசயிக்கத்தக்க முறையில் தன்னைத் தானே ரீபூட் செய்துகொண்டு சிறப்பாக செயல்பட்டதை கண்டறிந்தனர். நீங்களும் ட்ரை பண்ணலாமே?

News July 6, 2025

நக்சல்கள் எங்கள் தோழர்களே: திருமாவளவன் பேச்சு

image

மக்களின் உரிமைக்காக போராடும் நக்சல்கள் எங்கள் தோழர்கள்தான் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர்கள் குரலற்றவர்களுக்கான குரல் என தெரிவித்த அவர், நக்சல் தனிப்பட்ட லாபத்திற்காக போராடுவதில்லை எனவும் கூறியுள்ளார். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் மத்திய இந்தியாவின் பிற வனப்பகுதிகளில் ஆயுதமேந்திய இயக்கங்களைக் குறிப்பிட்டு திருமா இவ்வாறு பேசியுள்ளார்.

News July 6, 2025

தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு திருவிழாவையொட்டி நாளை(ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும். இதனால், மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் நாளை இயங்காது. குடமுழுக்கு விழாவையொட்டி சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், 6,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். TNSTC சிறப்பு பஸ்களையும் அறிவித்துள்ளது.

error: Content is protected !!