News April 5, 2024

தேர்தலுக்கு பின் ஆள்சேர்ப்பு விறுவிறுப்படையும்

image

இந்தியாவில் மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் ஐ.டி., துறையில் காலியாக உள்ள சீனியர் மற்றும் புதிய பணியிடங்களை நிரப்புவதற்கு ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் விறுவிறுப்படையுமென முன்னணி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர், பொருளாதார நிலைத்தன்மை, வளர்ச்சிக்கான வாய்ப்புக்கு உத்தரவாதம் கிடைக்குமென்பதால், இது வேலைவாய்ப்பு சந்தையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.

Similar News

News April 21, 2025

விடைத்தாள் திருத்தம் தொடக்கம்.. மே 19ல் 10th ரிசல்ட்

image

மார்ச் 28 – ஏப்.14 வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. அனைத்து தேர்வுகளும் முடிவடைந்த நிலையில், SSLC விடைத்தாள் திருத்தும் பணி தமிழக முழுவதும் சற்றுமுன் தொடங்கியுள்ளது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 5:30 மணி வரை இப்பணி நடைபெறுகிறது. வரும் 30-ம் தேதியுடன் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்து, தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 19-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 21, 2025

BREAKING: தங்கம் விலை புதிய உச்சம்!

image

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து ஒரு சவரன் ₹72,000-ஐ கடந்துள்ளது. இன்று (ஏப்.21) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹9,015-க்கும், சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹72,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹111க்கும் விற்பனையாகிறது.

News April 21, 2025

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா

image

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைக்க TN அரசு டெண்டர் கோரியுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை, கரூர், தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என 2024 பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக திருவண்ணாமலையில் ₹34 கோடி செலவில், மினி டைடல் பூங்கா அமையவுள்ளது. ஓராண்டில் கட்டி முடிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

error: Content is protected !!