News July 5, 2025
தஞ்சை: வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாகியும், தொடர்ந்து பதிவை புதுப்பித்து வரும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்கும் இளைஞர்கள் தஞ்சை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். இதில், 3 ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படும். இதனை அனைவருக்கும் SHARE செய்யவும்.!
Similar News
News July 6, 2025
மூத்த குடிமக்களுக்கான செயலி அறிமுகம்

தஞ்சையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலமாக முதியோர் மற்றும் மூத்த குடிமக்களின் நலனை மேம்படுத்தும் விதமாக மூத்த குடிமக்களுக்கான செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இச்செயலி மற்றும் மூத்த குடிமக்கள் நலன் தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண் 303, மாவட்ட ஆட்சியர் வளாகம் ஆகிய முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
News July 6, 2025
தஞ்சை மாவட்டத்தில் உள்ள நீர்வளங்கள்

தமிழகத்திலேயே மிகவும் முக்கியமான நீர்வளங்களை நம் தஞ்சை மாவட்டம் கொண்டுள்ளது. இங்கு பல ஏரிகள், அணைகள் உள்ளன. அதில் முக்கியமாக கல்லணை அணை, கச்சமங்கலம் அணை, தென்பெரம்பூர் அணை போன்ற அணைகளும், சிவகங்கை ஏரி, சமுத்திரம் ஏரி, செங்கழுநீர் ஏரி, குறிச்சிக்குளம் ஏரி, பெராவூரணி ஆகிய ஏரிகளும் நம் தஞ்சையில் இயற்கை அழகுகளால் நிரம்பி காட்சியளிக்கிறது. தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News July 6, 2025
தஞ்சை இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 5) இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவர்களை மேற்கண்ட தொலைப்பேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.