News July 5, 2025

அரியலூர்: தொழில் தொடங்க கடன் உதவி

image

அரியலூர் மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் தகவலுக்கு அரியலூர் மாவட்ட தொழில் மையத்தை (04329- 228555) தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

Similar News

News July 6, 2025

அரியலூர் இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் (ஜூலை 5) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல் துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன. அவரச காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கலாம்.

News July 5, 2025

அரியலூர்: வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை!

image

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாகியும், தொடர்ந்து பதிவை புதுப்பித்து வரும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்கும் இளைஞர்கள் அரியலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். இதில், 3 ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படும். இதனை அனைவருக்கும் SHARE செய்யவும்.!

News July 5, 2025

ஜெயங்கொண்டத்தில் பெண் நள்ளிரவில் தற்கொலை

image

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அய்யனார் கோயில் தெரு, உய்யக்கொண்டான் ஏரிக்கரையைச் சேர்ந்த டூவீலர் மெக்கானிக் ரமேஷ் என்பவரது மனைவி ஷபிராபேகம் நள்ளிரவில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது, இது குறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!