News July 5, 2025
மாற்றுத்திறனாளிகள் குறித்து விவரங்கள் சேகரிப்பு

சிவகங்கை மாவட்டம் சுவஸ்திக் தொண்டு நிறுவன முன்களப் பணியாளர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணிகள் வருகின்ற ஜுலை.7ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்படவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களுக்கு, தகுந்த ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News July 6, 2025
10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

சிவகங்கை மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் இந்த லிங்க் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஜூலை 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க மத்திய அரசு வேலையை வாங்குங்க.
News July 6, 2025
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஸ்தல வரலாறு

முன்னொரு காலத்தில் கண்டதேவி அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் வறட்சி மிகுந்த நிலையில் விவசாயம் இல்லாமல் பஞ்சத்தில் இருந்தது. எனவே இப்பகுதி மக்கள் இக்கோயில் உள்ள இடத்தில் கூடி பிரார்த்திக்க பொன் பொழிந்தது. பொன்னுக்கு மற்றொரு சொல் சொர்ணம். எனவே இக்கோவிலில் உள்ள சுவாமி சொர்ணமூர்த்தி என அழைக்கப்பட்டார் என்பது வரலாறு. இக்கோவில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட கோயிலாகும்.
News July 6, 2025
சிவகங்கை இரவு ரோந்து பணி விவரம்

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (05.07.25) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் சார்பாக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியை சேர்ந்த அதிகாரிகளின் நம்பர் குறிப்பிடப்பட்டுள்ளது. அல்லது 100 டயல் செய்யலாம். அவசர காலத்திற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அழைக்கலாம்.