News July 5, 2025
காங்கேயம் அருகே ஒருவருக்கு டெங்கு காய்ச்சல்

சிவன்மலை ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்மலை பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்குமார்(40) என்பவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது டெங்கு காய்ச்சல் பாதித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது. இதனால் அக்கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Similar News
News July 6, 2025
B.E முடித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளத்தில் வேலை

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் இங்கே <
News July 6, 2025
ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

திருப்பூரைச் சேர்ந்த பெண் தனது கணவருடன் முன்பதிவு செய்யபடாத டிக்கெட் எடுத்து, அவசரத்திற்கு AC கோச்சில் ஏரியுள்ளனர். அங்கு வந்த TTR, பெண்ணின் கணவரை ஒரு பெட்டியில் இருக்க வைத்து விட்டு, அப்பெண்ணை வேறு பெட்டிக்கு அழைத்து சென்றார். அப்போது, அங்கு பாலியல் அத்துமீறலீல் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அப்பெண் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், TTR பாரதியை கைது செய்தனர்.
News July 6, 2025
திருப்பூர் மாவட்ட குற்றவியல் கோர்ட்டு நீதிபதி மாற்றம்

தமிழகம் முழுவதும் நீதிபதிகள், துணை நீதிபதிகள் நிலையில் உள்ளவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளராக இருந்த மோகனவள்ளி, திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சென்னை சிவில் கோர்ட்டு 26-வது உதவி நீதிபதியான விக்னேஷ் மது, திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.