News July 5, 2025

காங்கேயம் அருகே ஒருவருக்கு டெங்கு காய்ச்சல்

image

சிவன்மலை ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்மலை பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்குமார்(40) என்பவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது டெங்கு காய்ச்சல் பாதித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது. இதனால் அக்கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Similar News

News August 26, 2025

திருப்பூர்: 4 வாலிபர்கள் மீது குண்டாஸ்!

image

திருப்பூர்: பல்லடம் பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் கவியரசன். இவரை கடந்த ஜூலை 24ஆம் தேதி ஓர் கும்பல் அரிவாளால் கொலை வெறித் தனமாக தாக்கினர். இதுகுறித்த புகாரில் பார்த்திபன்(27), கோபாலகிருஷ்ணன்(23), பிரித்திவிராஜ்(23), தாமரை சந்திரன்(23) ஆகியோரை சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் பரிந்துரையின் கீழ் போலீசார் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே உத்தரவிட்டார்.

News August 25, 2025

திருப்பூர்: ரூ.64,000 சம்பளம்: வங்கி வேலை! நாளை கடைசி

image

திருப்பூர் மக்களே, SBI வங்கியில் வாடிக்கையாளர் சேவை மற்றும் சேல்ஸ் பிரிவில் உள்ள, 5,180 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. நாளை ஆக.26 கடைசி தேதி ஆகும். உதவும் மனம் கொண்ட திருப்பூர் மக்களே SHARE பண்ணுங்க!

News August 25, 2025

திருப்பூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️முதலில் <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.

▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.

▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.

▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். (SHARE) <<17511404>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!