News July 5, 2025
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் காலமானார்

மூத்த தமிழறிஞர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (91) காலமானார். நெஞ்சத்தோட்டம், ஐயப்பன் பாமாலை உள்ளிட்ட நூல்களை எழுதிய அவர், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை பதிப்பித்தவர். திமுகவின் பிரச்சார முழக்கமான ஓரணியில் தமிழ்நாட்டின் உரிமை நாட்டுவோம். தமிழர் ஒற்றுமையாய்த் திரண்டெழுந்தே வலிமை காட்டுவோம் என்ற கவிதையை நேற்று எழுதியபின் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 5, 2025
மாத சம்பளதாரர்களுக்கு… PF கணக்கில் வட்டி டெபாசிட்

PF கணக்கு வைத்திருக்கும் மாத சம்பளதாரர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை EPFO வெளியிட்டுள்ளது. 2024-25 நிதியாண்டுக்கான வட்டித் தொகையை அது செலுத்தியுள்ளது. PF தொகைக்கு 8.25% ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. 31/03/2025 தேதி வரைக்குமான வட்டி, உங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது பாஸ்புக்கில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. உங்கள் கணக்கில் PF-க்கான வட்டி டெபாசிட் செய்யப்பட்டுவிட்டதா… உடனே செக் பண்ணுங்க.
News July 5, 2025
சுட்டெரிக்கும் வெயில்.. கவனம் தேவை மக்களே!

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ள போதும், பிற மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. மதுரை, மீனம்பாக்கம், நாகை, திருச்சி, வேலூர், காரைக்கால் ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரியை (பாரன்ஹீட்) தாண்டியுள்ளது. இந்நிலையில், வரும் நாள்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும்போது கவனம் தேவை மக்களே!
News July 5, 2025
ஜூலை 15ல் ‘உங்களுடன் முதல்வர் திட்டம்’ தொடக்கம்

‘உங்களுடன் முதல்வர் திட்டம்’ ஜூலை 15-ம் தேதி அனைத்து நகர்புற, ஊரகப் பகுதிகளில் தொடங்கி வைக்கப்படுகிறது. இத்திட்டத்தை கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் உடல் நலனைப் பேணும் வகையில் மருத்துவ சேவைகளை வழங்கவும் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.