News July 5, 2025

புதுக்கோட்டை: வீட்டு மனை வரன்முறை செய்யலாம்?

image

புதுகை மக்களே அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், (ஜூலை 1) முதல் அவற்றை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் <>onlineppa.tn.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தை நேரடியாகத் தொடர்புகொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News July 5, 2025

புதுகை: சொந்தமாக தொழில் தொடங்க கடன் உதவி

image

புதுகை மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.<> இந்த லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு மாவட்ட தொழில் மையத்தை (04322- 221794) தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்ங்க…

News July 5, 2025

புதுக்கோட்டை: 12th போதும், ரூ.81,000 சம்பளத்தில் அரசு வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3131 Data Entry Operator (DEO) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறைந்தது 12-ஆம் வகுப்பு முடித்த, 18 முதல் 27 வயதுக்குட்பட்ட நபர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து வரும் ஜூலை.18-க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்.

News July 5, 2025

புதுக்கோட்டை: பெண் தூக்கிட்டு தற்கொலை

image

புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி அழகன்வயலை சேர்ந்தவர் சத்யபிரியா (26). இவருக்கு திருமணம் ஆகி 3 வருடமான நிலையில் ஒரு மகன் உள்ளார். கணவன் மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நேற்று மணமேல்குடி பாரதி நகரில் உள்ள அவரது வீட்டில் மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சத்திய பிரியாவின் தந்தை அளித்த புகாரில் மணமேல்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!