News July 5, 2025
23 வழக்குகளில் தொடர்புடையவர் மீது குண்டர் சட்டம்

முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தற்கா பகுதியில் தகராறில் ஈடுபட்ட வசந்த் என்ற நபரை கைது செய்த காவல்துறையினர் நாகப்பட்டினம் சிறையில் அடைத்தனர். மேலும் வசந்த் மீது கொலை முயற்சி அடிதடி என மொத்தம் 23 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர், வசந்த் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
Similar News
News July 5, 2025
திருவாரூர்: மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

“மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூலை 11 காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிக்கான சிறப்புக் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அவர்களது நலத்திட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் திருவாரூர் கோட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் எழுத்துப்பூர்வமான மனுக்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.” என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News July 5, 2025
திருவாரூர்: 12th போதும் ரூ.81,000 சம்பளம்

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3131 Data Entry Operator (DEO) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறைந்தது 12-ஆம் வகுப்பு முடித்த, 18 முதல் 27 வயதுக்குட்பட்ட நபர்கள் <
News July 5, 2025
திருவாரூர்: மனை வைத்திருப்பவர்கள் கவனிக்க

திருவாரூர் மக்களே அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், (ஜூலை 1) முதல் அவற்றை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் <