News July 5, 2025
சேலத்தில் வீட்டில் விபச்சாரம் நடத்திய 2 பேர் கைது

சேலம், சீரங்கபாளையம் அருகே ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், அஸ்தம்பட்டி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். இதில், 2 பெண்களை வைத்து விபச்சாரம் நடந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அந்தப் பெண்களை மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பினர். மேலும், புரோக்கர்களாகச் செயல்பட்ட விஜி மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News July 5, 2025
சேலம் வங்கியில் வேலை? உடனே விண்ணப்பிங்க!

சேலம்: பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் கோவை, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க<
News July 5, 2025
ரேஷன் கார்டுகள் செல்லாது? உண்மை என்ன

சேலம்: ஜூன் 30-ந்தேதிக்குள் ரேஷன் கார்டுடன் கைரேகை அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டு செல்லாது என்ற செய்தி வதந்தி என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. AAY மற்றும் PHH அட்டைதாரர்கள் அனைவரும் கைரேகை பதிவு செய்வது அவசியம், ஆனால் அதற்கான கடைசி தேதி வரையறுக்கப்படவில்லை. இருப்பினும் சேலம் மக்களே உங்கள் அருகில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகை அப்டேட் செய்து கொள்ளுங்கள்!
News July 5, 2025
திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை 07- ல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் பக்தர்களின் வசதிக்காக இன்று (ஜூலை 05) முதல் ஜூலை 08 வரை சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இன்று 2 விரைவு பேருந்துகளும், நாளை 2 விரைவு பேருந்துகளும் இயக்கப்படுகிறது என அதிகாரிகள் தகவல்!