News July 4, 2025
ஒரு மணி நேரத்தில் 100 மரணங்கள்.. காரணம் என்ன?

மிக கொடுமையான விஷயங்களில் ஒன்று தனிமை. தனிமையால் ஒரு மணி நேரத்தில் 100 மரணங்கள் உலகளவில் நடப்பதாக ஒரு அதிர்ச்சி தகவலை உலக சுகாதார அமைப்பு(WHO) வெளியிட்டுள்ளது. 6-ல் ஒருவர் உலகளவில், தனிமையால் உயிரிழப்பதாகவும், கடந்த 2014 – 2013 வரை 8.7 லட்சம் மக்கள் இதனால் மரணத்தை சந்தித்துள்ளதாகவும் WHO தெரிவித்துள்ளது. டீனேஜ் மற்றும் இளைஞர்கள் தனிமையால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 8, 2025
பாகுபலியில் நடிக்க ஸ்ரீதேவிக்கு சம்பள பிரச்னையா?

பாகுபலி படத்தில் ராஜமாதா வேடத்தில் ஸ்ரீதேவி நடிக்கவிருந்ததாக போனி கபூர் கூறியுள்ளார். ராஜமெளலி அவரிடம் கதை சொல்லிய பிறகு தயாரிப்பு குழுவினர் சம்பளம் குறைவாக பேசியதால் ஸ்ரீதேவியை அப்படத்தில் நடிக்க அனுமதிக்கவில்லை என அவர் தெரிவித்தார். ராஜமெளலியிடம் தயாரிப்பு குழுவினர் உண்மையை கூறாமல் தவறான தகவலை சொல்லிவிட்டதாகவும் போனி கபூர் குறிப்பிட்டார். ராஜமாதா வேடத்திற்கு ஸ்ரீதேவி பொருத்தமானவரா?
News September 8, 2025
அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை: உதயநிதி

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பித்த மகளிர் அனைவருக்கும் கண்டிப்பாக உரிமைத் தொகை கிடைக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், இதுவரை ஒரு கோடியே 20 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுவதாகவும், இந்த தொகை எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் கூறினார். உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ள தகவல் மகளிருக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
News September 8, 2025
செப்டம்பர் 8: வரலாற்றில் இன்று

*1944 – இரண்டாம் உலகப் போரில் வி-2 ஏவுகணை மூலம் லண்டன் நகரம் மீது தாக்குதல். *1946 – பல்கேரியாவில் முடியாட்சி ஒழிப்பு. *1954 – தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு நிறுவப்பட்டது. *2006 – மகாராஷ்டிரா, மாலேகான் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொலை. *2010 – நடிகர் முரளி மறைந்த நாள்.