News July 4, 2025
வேலூர் பயனாளிகளுக்கு விதை தொகுப்புகளை வழங்கிய கலெக்டர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 4) வேளாண் மற்றும் வேளாண் விற்பனை வணிகத்துறையின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் 3 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து கலெக்டர் சுப்புலட்சுமி பயனாளிகளுக்கு காய்கறி மற்றும் பழச்செடி விதை தொகுப்புகளை வழங்கினார். இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News July 5, 2025
வேலூர் உதவித்தொகை பெற கலெக்டர் தகவல்

வேலூர் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்களுக்கு 2025-2026 நிதியாண்டிற்கான கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்களை இ-சேவை மையம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். வாசிப்பாளர் உதவித்தொகை பெற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News July 5, 2025
வேலூரில் இன்னைக்கு எங்கு எல்லாம் மின்தடை?

வேலூர் 110/11 KV துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பனியின் காரணமாக இன்று (ஜூலை 5) சில இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெம்பி, தோணிமேடு, செங்கனவரம், மாம்பாக்கம், மேற்பாடி, மிட்டூர், வள்ளிமலை, திருவலம், கீழ்மின்னல், அரப்பாக்கம், பெருமுகை, சேவூர், மற்றும் கரணம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News July 5, 2025
வேலூர் திமுக பிரமுகரை வெட்டிய 2 பேர் சிறையில் அடைப்பு

வேலூர் விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரியின் கணவரும் திமுக பிரமுகருமான பாலச்சந்திரன் நேற்றிரவு மர்ம நபர்கள் வெட்டியதில் படுகாயத்துடன் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிந்த லத்தேரி போலீசார் (ஜூலை 4) விரிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (43) மற்றும் சீனிவாசனை (46) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.