News July 4, 2025

நாய்க்கடியை அலட்சியம் செய்யாதீங்க: அரசு எச்சரிக்கை!

image

நாய்க்கடி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி செலுத்துவது முக்கியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியும் இருசிறார்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாய் கடித்த இடத்தை முறையாக கழுவாமல் இருப்பது, தாமதமாக சிகிச்சைக்கு வருவது, தடுப்பூசி கால அட்டவணையை மீறுவது ஆகியவை உயிருக்கே ஆபத்தாக மாறும் என தெரிவித்துள்ளது.

Similar News

News July 5, 2025

விமான விபத்து: நிவாரணம் வழங்குவதில் சுணக்கம்!

image

குஜராத் விமான விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குவதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஆவணங்கள் பெறுவதில் AIR INIDIA நிறுவனம் அலட்சியம் காட்டுவதாகவும், ஒரு சிலரிடம் இல்லாத ஆவணங்கள் சிலவற்றை கேட்டு இன்சூரன்ஸ் நிறுவனம் அலைக்கழிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. ஏற்கெனவே வேதனையில் இருப்போருக்கு மேலும் வேதனைகளை கொடுக்காதீங்க என பலரும் AIR INDIA நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவிக்கின்றனர்.

News July 5, 2025

20 பாடல்களைக் கொண்ட ‘பறந்து போ’

image

ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பறந்து போ’. இயக்குநரின் மாறுபட்ட திரைக்கதையால் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, இப்படத்தில் 20 பாடல்கள் (Tracks) உள்ளன. கதை சூழலுக்கு ஏற்ப பாடல் வரிகளும் ரசிக்கும்படி உள்ளதாம். இதன் பாடல் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி. இவர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பல படங்களில் உதவியாளராக பணியாற்றியுள்ளாராம்.

News July 5, 2025

ரிதன்யா மரணம் வெறும் தற்கொலை அல்ல: சீமான்

image

இனி வாழவே முடியாத நிலைக்கு அவரை தள்ளி, தற்கொலை செய்ய வைத்த திட்டமிட்ட படுகொலை இது. இந்த நூற்றாண்டிலும் வரதட்சணை கொடுமையால் பெண்கள் உயிரிழப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என ரிதன்யா தற்கொலை குறித்து பேசியுள்ளார் நாதகவின் சீமான். அரசியல் அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு காரணமான கணவர், மாமனார், மாமியார் மீது எளிதில் ஜாமினில் வெளிவரும் வகையில் வழக்கு பதிவு செய்துள்ளனர் என சீமான் சாடியுள்ளார்.

error: Content is protected !!