News July 4, 2025
கல்லூரி மாணவி தற்கொலை – இளைஞர் கைது

நரசிங்கம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் புவனேஸ்வரி என்ற மாணவியிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குணசேகை கைது செய்தனர்.
Similar News
News July 5, 2025
தஞ்சை: மனை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு?

தஞ்சை மக்களே அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், (ஜூலை 1) முதல் அவற்றை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள்<
News July 5, 2025
தஞ்சை:மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஜூலை 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படங்கள், இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். Share It Now
News July 5, 2025
தஞ்சை: விஷம் குடித்து மாணவி தற்கொலை

ஆடுதுறை அருகே உள்ள நரசிங்கம்பேட்டை கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் மகள் புவனேஸ்வரி (வயது 19). புவனேஸ்வரி அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (30) என்பவர் வீட்டில் பால் ஊற்றி வந்துள்ளார். அப்போது புவனேஸ்வரியிடம், குணசேகரன் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி விடாமல் வற்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். போலீசார் குணசேகரனை கைது செய்தனர்.