News July 4, 2025

சென்னையில் 300 மாமன்ற கவுன்சிலர்கள் தேர்வு

image

பெருநகர சென்னை மாநகராட்சிபகுதியில் தற்போதுள்ள 200 வார்டுகளைவிட 2026 ஆம் ஆண்டு இறுதியில் 300 மாமன்ற கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்காக ரிப்பன் பில்டிங் மாளிகையில் ரூபாய் 62.50 கோடி மதிப்பில் புதிய மாமன்ற அலுவலகம் கட்டுவதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது, இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 5, 2025

திருமணம் வரம் தரும் திரிசூலம் திரிபுரசுந்தரி

image

சென்னை திரிசூலம் பகுதியில் அமைந்துள்ளது திரிசூலநாதர் திருக்கோயில். இது ஒரு பழமையான சிவன் கோயிலாகும். நான்கு மலைக் குன்றுகளுக்கு நடுவே இக்கோயில் அமைந்துள்ளதால், இந்த மலைகள் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. இங்குள்ள அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதியில், வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு புடவை சார்த்தி, வளையல் அணிவித்து, சந்தனக்காப்பு செய்து வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News July 5, 2025

சென்னையில் இனிமேல் ஈசியா புகார் அளிக்கலாம்

image

சென்னை மெட்ரோபொலிட்டன் குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் (CMWSSB) பொதுமக்கள் புகார்கள் மற்றும் கோரிக்கைகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க, புதிய Grievance Redressal System அமைத்துள்ளது. குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான பிரச்சனைகளை தெரிவிக்க 044-4567 4567 (20 லைன்கள்) என்ற எண்ணிலும், இலவச தொலைபேசி எண் 1916 மூலமாகவும் புகார் அளிக்கலாம். மேலும் QR கோடு ஸ்கேன் செய்தும் புகார் பதிவு செய்யலாம்.

News July 5, 2025

சென்னை முழுவதும் உற்பத்தி செய்பவர்களுக்கு உதவித் தொகை

image

சென்னை முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 6, 135 உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களின் பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக ரூ.122.7 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் பெண் உற்பத்தியாளர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

error: Content is protected !!