News April 5, 2024
டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு, ஏப்ரல் 17 முதல் 19ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
குமரி: மிதிவண்டி இணைப்பு பணிக்கு ஆட்கள் தேர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2025 -26 ஆம் கல்வி ஆண்டிற்கான மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் மிதிவண்டி பாகங்கள் இணைக்கும் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. மிதிவண்டி தொழிலில் அனுபவம் உள்ள விருப்பமுள்ளவர்கள் நவ.21க்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். ஷேர்.
News November 18, 2025
குமரி: மிதிவண்டி இணைப்பு பணிக்கு ஆட்கள் தேர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2025 -26 ஆம் கல்வி ஆண்டிற்கான மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் மிதிவண்டி பாகங்கள் இணைக்கும் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. மிதிவண்டி தொழிலில் அனுபவம் உள்ள விருப்பமுள்ளவர்கள் நவ.21க்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். ஷேர்.
News November 18, 2025
தேசிய இயற்கை மருத்துவ தின விழிப்புணர்வு பேரணி

குமரன்குடி தனியார் இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரியில் தேசிய இயற்கை மருத்துவ தின விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. மரியா மருத்து வக்கல்விக் குழும தலைவர் டாக்டர் ஜி.ரசல்ராஜ், துணைத்தலைவர் டாக்டர் ஷைனி தெரசா ஆகியோர் தலைமை தாங்கினர். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்து திருவட்டார் பஸ்நிலையம் வரை பதாகைகள் ஏந்தி மாணவர்கள் பேரணியாக வந்தனர். இதில் யோகா, சிலம்பாட்ட நிகழ்வுகள் நடந்தது.


