News July 4, 2025
உலக செஸ் போட்டியில் அரியலூர் சிறுமி வெற்றி

ஜார்ஜியா நாட்டில் உலகக் கோப்பை செஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சதுரங்க வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் நேற்று நடைபெற்ற 10 வயதுக்குப்பட்டோர் பிரிவில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி சர்வாணிகா வெண்கல பதக்கம் வென்றார். இதை அடுத்து, சர்வாணிகாவிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நீங்கலும் SHARE செய்து பாரட்டலாமே…
Similar News
News July 5, 2025
அரியலூரில் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட காவல் துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே (04-07-2025) அரியலூர் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரத்தை அரியலூர் மாவட்ட காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். தங்களது பகுதியில் ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம்.
News July 4, 2025
அரியலூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இருசக்கங்களில் பயணிக்கும் போது சாலையில் சாகசத்தை தவிர்க்க வேண்டும். மீறினால் நடவடிக்கை ஏற்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
News July 4, 2025
அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை. சைபர் குற்றங்களை ஆள் மாறாட்டம் செய்து, தங்களை police NCB CBI RBI மற்றும் பிற சட்ட அமலாக்க துறை என்றும் உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்வதாக கூறி நம்ப வைத்து மோசடியில் ஈடுபட்டு பணம் பறிக்கிறார்கள். எனவே, இத்தகைய ஆள் மாறாட்ட அழைப்பு மோசடியில் ஏமாறதீர்கள் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.