News May 8, 2025

குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என்று பெயரிடப்படுகிறது!

image

‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்தியர்களின் உயிரை பறித்த மனித அரக்கர்களான பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் கொன்று குவித்தது. இதை இந்தியர்கள் கொண்டாடுகிறார்கள். இச்சம்பவம் என்றென்றும் நினைவில் இருக்கும் வகையில், மே 7-ல் பிறந்த தங்கள் குழந்தைகளுக்கு சிலர் இப்பெயரை சூட்டத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், பிஹாரில் குந்தன் குமார் என்பவர் தனது மகளுக்கு ‘சிந்தூர்’ என்று பெயரிட்டு, தேசபக்தியை வெளிப்படுத்தினார்.

Similar News

News March 28, 2026

போட்டி தொடங்கும் முன்பே.. RCB-க்கு SHOCK

image

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று IPL 2026 சீசன் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் RCB உடன் SRH அணி மோதுகிறது. இந்நிலையில், காயம் காரணமாக RCB வீரர் ஜோஸ் ஹேசில்வுட் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் மற்றொரு வீரரான நுவான் துஷாராவும் விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கெனவே தனிப்பட்ட காரணங்களால் யாஷ் தயாள் இந்த சீசனிலிருந்து வெளியேறினார்.

News March 28, 2026

BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

image

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக டி.வி.பாலமுருகன் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று வெளியான வேட்பாளர் பட்டியலில் ஆத்தூரில் விஸ்வநாதன் என்பவர் போட்டியிடுவார் என EPS அறிவித்தார். இதனால், அதிருப்தி அடைந்த டி.வி.பாலமுருகன், அதிமுகவில் இருந்து விலகி, ஐ.பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.TNElection2026

News March 28, 2026

சொந்த வீடு கட்டணுமா? பணம் தரும் அரசு திட்டம்!

image

PM ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ₹2.67 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கிறது. இந்த மானியம் 3 தவணைகளாக வழங்கப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், சொந்த வீடு இல்லாதவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் பயன்பெற https://pmaymis.gov.in -ல் விண்ணப்பியுங்கள். பலரது கனவை நிறைவேற்றும் இத்திட்டத்தை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள, SHARE THIS.

error: Content is protected !!