News May 8, 2025

கொரோனா: 2021-ல் கூடுதலாக 20 லட்சம் பேர் மரணம்

image

கொரோனா காலத்தில், இந்தியாவில் 2021-ல் கூடுதலாக 20 லட்சம் பேர் பலியாகி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சக பதிவாளர் ஜெனரல் அலுவலகம், 2018-2021 உயிரிழப்புகள் குறித்த 3 புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் 2018-ல் 82 லட்சம், 2019-ல் 83 லட்சம், 2020-ல் 81 லட்சம், 2021-ல் 1.03 கோடி பேர் உயிரிழந்திருப்பதாக கூறியுள்ளது. இது 2020 உடன் ஒப்பிடுகையில் 20 லட்சம் அதிகம்.

Similar News

News August 21, 2025

இந்த நடிகை போல நீ ஆகணும்.. டார்ச்சர் செய்த கணவர்!

image

‘நடிகை நோரா பதேகி போல நீ மாறணும்’ என கூறி உ.பி.யை சேர்ந்த கணவர் ஒருவர், தனது மனைவியை கொடுமை செய்துள்ளார். தினமும் 3 மணி நேரம் உடற்பயிற்சி, இல்லையென்றால் அன்று சாப்பாடு கட் என கண்டிஷன்களை வைத்தவர், கர்ப்பிணியான அவருக்கு சீக்ரெட்டாக கருக்கலைப்பு மாத்திரையும் கொடுத்துள்ளார். இந்த கொடுமையை அனுபவிக்க அப்பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டுக்கு 50 லட்சம் வரதட்சணை கொடுத்துள்ளனர். இவர்களை என்ன சொல்வது?

News August 21, 2025

அண்ணாமலைக்கு டிரான்ஸ்ஃபர்.. அடுத்து என்ன?

image

ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்து ஒதுங்கியிருப்பது போல அண்ணாமலை காட்டிக்கொண்டாலும், தனது ஆதரவாளர்கள் மூலம் நயினாருக்கு அவர் குடைச்சல் கொடுப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதையறிந்த டெல்லி பாஜக, கூட்டணிக்கு சேதாரம் வரக்கூடாது என்பதற்காக மேற்கு வங்க தேர்தல் பொறுப்பாளராக அவரை நியமிக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 21, 2025

BREAKING: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில், வரும் 26-ம் தேதி திட்ட விரிவாக்கத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஏற்கெனவே காலை உணவுத் திட்டத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெறும் நிலையில், தற்போது விரிவாக்கம் செய்வதன் மூலம், மேலும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுவர்.

error: Content is protected !!