News May 8, 2025
பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கள் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வேலூர், அரும்பாவூர், அசூர், நக்கசேலம் ஆகிய கிராமங்களில் வருகிற மே.10ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வளங்கள் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 3, 2025
இதில் பெரம்பலூர் மாவட்டம் தான் முதலிடம்

நெல், நிலக்கடலை, கரும்பு, சோளம், சின்ன வெங்காயம் மற்றும் முந்திரி முதலியவை பெரம்பலூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் பயிர்கள் ஆகும். இதில் முக்கியமாக தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் மொத்த சிறிய வெங்காய உற்பத்தியில் 24% பெரம்பலூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படுகிறது. இதன் மூலம் மாநிலத்தில் சின்ன வெங்காய உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News November 3, 2025
பெரம்பலூர்: B.E படித்தவர்களுக்கு வேலை ரெடி!

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000 – ரூ.2,20,000
3 கல்வித் தகுதி: B.E., B.Tech., CA., CMA., MBA.,
4. வயது வரம்பு: 45 வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…
News November 3, 2025
பெரம்பலூர் மாவட்டம்- ஓர் பார்வை

சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய தரவுகள் குறித்து அறிந்து கொள்வோம்.
▶️ மொத்த மக்கள் தொகை – 5.65 லட்சம்
▶️ ஆண்கள் – 2.82லட்சம்
▶️ பெண்கள்- 2.83 லட்சம்
▶️ படிப்பறிவு – 83.39%
▶️ மொத்த பரப்பளவு – 1,756 சதுர கி.மீ. SHARE NOW!


