News May 8, 2025
மக்கள் விழிப்புடன் இருங்கள்: PM மோடி வலியுறுத்தல்

நாடு முக்கியமான காலகட்டத்தில் உள்ள நிலையில், நாடு முழுவதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என PM மோடி வலியுறுத்தியுள்ளார். மாநில அதிகாரிகள், கள நிறுவனங்களுடன் நெருங்கிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என PM கேட்டுக்கொண்டுள்ளார். போலிச் செய்திகளை பரப்புவதை தடுக்க வேண்டும், உள்கட்டமைப்புகளை பாதுகாக்க வேண்டும் என்றும் டெல்லியில் பல்வேறு துறை செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனையில் மோடி தெரிவித்துள்ளார்.
Similar News
News August 22, 2025
BREAKING: இனி ₹2 லட்சம்.. தமிழக அரசு அறிவிப்பு

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான இழப்பீடு தொகையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விபத்து மரணத்திற்கான இழப்பீட்டை ₹1 லட்சத்தில் இருந்து ₹2 லட்சமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. விபத்தில் உடல் உறுப்பை இழந்தால் இனி ₹1 லட்சம்(முன்பு ₹20 ஆயிரம்) வழங்கப்படும். அதேபோல், இனி இயற்கை மரணத்திற்கு ₹30 ஆயிரமும், இறுதிச் சடங்கு செய்ய ₹10 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News August 22, 2025
மீண்டும் வருகிறது ‘டிக் டாக்’?

ஒருகாலத்தில் இந்தியர்களை பைத்தியமாக்கியது, டிக் டாக் செயலி. பாதுகாப்பு காரணங்களுக்காக 5 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு இதை தடைசெய்தது. இந்நிலையில் இந்தியாவில் மீண்டும் டிக் டாக் வரலாம் என தகவல் உலா வருகிறது. டிக் டாக் வெப்சைட் இந்தியாவில் இன்னும் ஆக்டிவாக இருப்பதாகவும், பலரால் அதை ஆக்சஸ் செய்ய முடிவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், டிக் டாக் செயலி அவைலபிளாக இல்லை. நீங்க டிக் டாக்கை வரவேற்பீர்களா?
News August 22, 2025
இரவில் பரோட்டா சாப்பிடுகிறவரா நீங்கள்?

இரவில் பரோட்டா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். பரோட்டா சாப்பிட்டால் ஜீரணமாக அதிகநேரம் பிடிக்கும். மேலும், இதற்காக அதிக தண்ணீரையும் வயிறு எடுத்துக்கொள்ளும். இதனால் உடலின் செயல்பாடுகள் முற்றிலும் பாதிக்கப்படும். தவிர, இதன் சத்தை பிரித்தெடுக்கவும் குடலுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுமாம். இதனால் உடல் சோர்வடைந்து தூக்கம் பாதிக்குமாம். SHARE IT!