News May 7, 2025

இறந்து அழுகிய நிலையில் கணவன் – மனைவி உடல்கள் மீட்பு

image

காட்டு பரமக்குடி மேலத்தெரு பகுதியில் உள்ள வீட்டில், இன்று இறந்து அழுகிய நிலையில் நாகசுப்பிரமணியன்(75) மற்றும் அவரது மனைவி தனலட்சுமி(70) ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா? இல்லை கொலை நடந்துள்ளதா? என்பது குறித்து ராமநாதபுரம் தடவியல் துறை போலீசார் உதவியுடன், பரமக்குடி நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News March 13, 2026

இராம்நாடு: கேஸ் புக் செய்வதில் சிக்கலா.? புதிய எண்கள்

image

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, ​SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..

News March 13, 2026

இராம்நாடு: டூவீலர் வாங்க ரூ.50,000 மானியம்; கலெக்டர் அறிவிப்பு

image

இராமநாதபுரம் மாவட்டம், உலமாக்­கள் மற்றும் பணியாளர்­கள் நல­வாரி­யத்தில் பதிவு­ பெற்ற 18 வயது மு­தல் 60 வயது­ வரை­ உள்­ள­ உலமாக்களுக்கு, இரு­சக்­க­ர­வாகனம் வாங்­க­ மானியத்­ தொகை ரூ.25,000 லிருந்­து ரூ.50,000 ஆக உயர்த்தி­ த­மிழக அர­சால் ஆணையிடப்­பட்டுள்­ளது. ஆகையால் தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்­ணப்­பங்கள் வர­வேற்­கப்­ப­டுகி­றது. என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.

News March 13, 2026

இராம்நாடு: OPS அணியினர் அதிமுகவில் இணைந்தனர்

image

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அதிமுக மாவட்ட கழக செயலாளர் M.A முனியசாமி தலைமையில், ஓபிஎஸ் அணியினர் தங்களை நேற்று அதிமுகவில் (மார்ச்.12) இணைத்துக்கொண்டனர். அதன்படி இராமநாதபுரம் தெற்கு ஒன்றிய ஓபிஎஸ் அணியினை சேர்ந்த பாஸ்கரன், ராமச்சந்திரன், நாகேந்திரன், தாமோதரன், துரை ஆகியோர் அஇஅதிமுகவில் இணைந்தனர்.

error: Content is protected !!