News May 7, 2025
ரயிலில் சிக்கி ஒருவர் பலி

காட்பாடி பள்ளிக்குப்பத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (50). லாரி டிரைவரான இவர் நேற்று மாலை பள்ளிக்குப்பம் ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றார். அப்போது அந்த வழியாக காட்பாடி நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் இவர் மீது மோதியது. இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே சிவக்குமார் உரியிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 4, 2025
வேலூர் மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம் (1/2)

அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில்<
News July 4, 2025
வேலூரில் மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம் (2/2)

காவல்துறையினர் நியாயமற்ற சோதனை, பறிமுதல், தாக்குதல், வாய்வழி துன்புறுத்தல் அல்லது தொல்லை, சட்ட விரோத கைது அல்லது தடுப்புக்காவல், முறையான நடைமுறைகளை பின்பற்றத் தவறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மனித உரிமைகள் ஆணையம்/காவல் கண்காணிப்பாளர்/ மஜிஸ்திரேட்டிடம் புகார் அளிக்கலாம். புகார் செய்யும் போது சாட்சி கணக்குகள், மருத்துவ பதிவுகள் (காயமடைந்திருந்தால்), வீடியோ பதிவுகள் (இருந்தால்) புகைப்படங்கள் தேவை.
News July 4, 2025
வேலூர் மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

வேலூர் மாநகராட்சியில் உள்ள தெருவிளக்கு பாரமரிப்பு பணிகள், குடிநீர் வினியோக பணிகள், சாக்கடை பராமரிப்பு பணிகள் மற்றும் பொதுசுகாதார பணிகள், சம்பந்தமான புகார்கள் குறித்து பொதுமக்கள் மாநகராட்சிக்கு தெரிவிப்பதற்கு 92800-97911 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலமாகவும், மேலும் iccc.vellore@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் என மாநகராட்சி கமிஷனர் லட்சுமணன் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யுங்கள்